திங்கள், செப்டம்பர் 26, 2005

இது வெறும் போர்வையா?

ஒரு பெரிய தேசம். பற்பல மொழிகள், மதங்கள், ஜாதிகள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள், நகராட்சிகள், கிராமங்கள்; இதைப் போல இன்னும் பல பிரிவுகள்.


உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, நான்காவது பெரிய ராணுவம், என்றெல்லாம் நாம் பெருமையாகச் சொல்லலாம். ஆனாலும் இந்தியா இப்போது எதிர்நோக்கியுள்ள சிலப் பிரச்சினைகளின் தொகுப்பு.

  • காஷ்மீர் பிரச்சினை
  • சீனாவுடன் எல்லைப் பிரச்சினை
  • ஸ்ரீலங்காப் பிரச்சினை
  • நேபாள மாவோயிஸ்டுகளின் தொல்லை
  • இந்து - முஸ்லீம் - கிருஸ்த்தவ பிரச்சினை [மும்பை, குஜராத், கோயம்புத்தூர், பிரிவினை, இன்னும் சில)
  • காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் பிரச்சினை
  • உள்நாட்டுத் தீவிரவாதிகள் (உல்ஃபா, நக்சலைட்டுகள், ...)
  • மொழிப் பிரச்சினை (தமிழ் - கன்னடம் மாத்திரமல்ல; பிஹாரி - அஸ்ஸாமி, மராத்தி - ஹிந்தி)
  • காஷ்மீர் பண்டிட்டுகள்
  • பங்களாதேஷினரின் ஊடுருவல் (1 கோடிக்கும் அதிகமாக)
  • வரிச்சுமை.
  • நகர மயமாக்கல்
  • விவசாய நிலங்களை அழித்தல்
  • அயல்நாட்டுக் கலாச்சாரத் தாக்கம்
  • காடுகளை அழித்தல்
  • அண்டை மாநிலங்களினிடையே ஒற்றுமையின்மை.
  • குடும்ப அமைப்பில் சிதைவு (முதியோர் இல்லங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு)
  • வேலையில்லாத் திண்டாட்டம்.
  • தண்ணீர் பிரச்சினை
  • ஜாதி பிரச்சினை
  • இட ஒதுக்கீடு (கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், ...)
  • தொழில்வள மேம்பாடுகள் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே (மாநிலம் / நகரம்) நடைபெறுதல்
  • நீதித்துறை / காவல்துறையில் சீர்கேடு
  • மக்களின் மேம்போக்கான எண்ணங்கள், ஒழுக்கக் குறைவு
  • வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை
  • சுகாதாரச் சீர்கேடு
  • அடிக்கடி நடைபெறும் வேலை நிறுத்தங்கள் (மருத்துவத் துறையிலும் வேலை நிறுத்தம் செய்வது கொடுமை)
  • நாட்டின் கடன் சுமை
  • அயல்நாடுகளின் சதி
  • மதம் மற்றும் மனித உரிமைக் கழகங்களின் போர்வையில் செயல்படும் சில தனியார் அமைப்புகள்
  • அன்னிய நிறுவனங்களின் குறுக்கீடு
  • சட்டத்திற்கு கட்டுபட மறுப்பவர்களின் எண்ணிக்கையில் உயர்வு (பெரும்பாலும் அரசியல்வாதிகள், பணக்காரர்கள்)
  • வருமான வரி ஏய்ப்பு
  • மானியம் என்ற பெயரில் கண்துடைப்பு
  • உள்கட்டமைப்பு வசதியின்மை
  • பல அரசியல்வாதிகளின் பொறுப்பற்றத்தன்மை
  • லஞ்சம், ஊழல்
  • வியாபாரமாக்கப்பட்ட கல்வி
  • திட்டமிடத் தவறுதல்
  • தொலைநோக்குப் பார்வை இல்லாமை
  • திட்டங்களை முறையாகச் செயல்படுத்தாத அதிகாரிகள் / முறையாகச் செயல்படுத்த முடியாமல் குறுக்கீடுகள்
  • பொழுதுபோக்கிற்கு கொடுக்கப்படும் அதிகப்படியான முக்கியத்துவம்
  • மாநில அரசுகள், மத்திய அரசின் முடிவிற்கு கட்டுப்படாமல் இருப்பது
  • நாட்டின் மேன்மையை விட மாநிலங்களின் மேன்மைக்கே முக்கியத்துவம் கொடுப்பது.

இதைத் தவிர இன்னும் ஆயிரம் சொல்லலாம். இவ்வளவு பிரச்சினைகளையும் வைத்துக் கொண்டு, நாம் எல்லோரும் ஜனநாயகம் என்ற பெரிய போர்வையைப் போர்த்திக்கொண்டுள்ளோம்.

இந்தியா கவனிக்க வேண்டியது வெளிநாட்டு பிரச்சினைகளை அல்ல; உள்நாட்டு பிரச்சினைகளை.

இதைத் தவிர நான் ஏற்கனவேக் குறிப்பிட்டது போல தமிழக - கர்நாடகா எல்லைப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது ஒரு வாரமாகவே மனதை நெருடுகிறது. யாரோ இரு நபர்கள் சாதாரண பணத்தகராறை தேசிய பிரச்சினையாக உருவாக்கி விட்டுள்ளனர்.

நான், இந்தப் பிரச்சினை இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு மத்திய அரசு தான் காரணம் என்று சொல்வேன். வீட்டில் தலைவன் சரியில்லை என்றால் தான் அண்ணன் - தம்பிக்கு இடையே தகராறு வரும். ஏதோ இரு நாடுகள் போல எல்லைத் தகராறு? கேட்பதற்கே வருத்தமாக இருக்கிறது.

மத்திய அரசு மிகத் தீவிரமாகச் செயல்பட்டு, இந்தப் பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். இல்லையென்றால் இருக்கும் ஆயிரத்தில், இது ஆயிரத்து ஒன்றாகச் சேர்ந்து விடும். வரைபடத்தை எடுத்து, ஆராய்ந்து உடனே முடிவெடுத்து சொல்லிவிட வேண்டும். அதனை இரு மாநிலங்களும் கேட்டே ஆக வேண்டும். (அது பாரபட்சமற்ற முடிவாக இருக்கும் என நம்புவோமாக!).

ஏதாவது ஒரு மாநிலத்தின் சார்பாகத் தான் முடிவு வரும். மக்கள் தெளிவடைய வேண்டும். பிரச்சினைகளை நீட்டிக்க விரும்புகிறார்களா அல்லது இதனை மறந்து மற்ற விஷயங்களில் ஈடுபடப் போகிறார்களா?. ஆட்சியாளர்களும் யாருக்கு சாதகமாக முடிவெடுத்தாலும், நமக்கு அடுத்தத் தேர்தலில் ஆபத்து என்றெல்லாம் நினைக்கக் கூடாது.

இந்திராகாந்தி ஆட்சிக்கு பிறகு, மத்தியில் ஆட்சிக்கு வந்த எந்த அரசுமே மாநிலங்களின் மேல் முழு ஆதிக்கம் செலுத்த முடியாமல் இருக்கின்றன. இதற்குக் காரணம் அவர்களுக்கு பெரும்பான்மை இல்லாததா அல்லது மாநிலக் கட்சிகளின் ஆதிக்கமா அல்லது மக்களின் எதிர்ப்பா என்று தெரியவில்லை. இந்த நிலையில் மாநிலங்கள் இன்னும் சில அதிகாரங்கள் கேட்கின்றன.

சுலபமான மேலாண்மைக்காகவே மாநில அரசுகள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டின் ஒருமைப்பாடைக் குலைப்பதற்காக அல்ல. என்னைக் கேட்டால் இந்த இரண்டு தலைமை முறையையே ஒழிக்கலாம் என்பேன். ஆனால் அது இப்போதைக்கு முடியாதது.

ஆனால் தற்காலிகத் தீர்வுக்கு, மத்திய அரசுகள் மாநிலங்களுக்கு சிலக் கட்டுபாடுகளை விதிக்கலாம்.

1. வரியானது, மத்திய அரசு விதிப்பதாகவே இருக்க வேண்டும். மாநில அரசுகள் வரி விதிக்கக் கூடாது.

2. ஆண்டு பட்ஜெட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தொகை ஒதுக்கப்பட்டு விடும். அதில் மாநிலங்கள் திட்டங்கள் தீட்டி, அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதனைக் கண்காணிக்க மத்திய குழு அமைக்கப்படும். தொகையானது, மக்கள் தொகையைப் பொறுத்தோ அல்லது அதன் வளங்களைப் பொருத்தோ அளவீடு செய்யப்படலாம்.

3. ஆனால் மாநில அரசு தனது பங்கில், சில நிறுவனங்கள் ஆரம்பித்து அதன் லாபத்தையும் பட்ஜெட்டில் சேர்த்து கொள்ளலாம் (உதாரணம்: பேருந்து நிறுவங்கள், ஆலைகள், விவசாயத் துறை, காடுகள் வளர்ப்பு)

4. நீர், மின்சாரம், சாலை, நிலம் தொடர்பாக எந்த அதிகாரமும் மாநிலங்களுக்கு கிடையாது.

இன்னும் சில.

உங்களுக்கு ஏதும் தோன்றினால் சொல்லுங்களேன்!

சில விசயங்களைக் கேட்பதற்கு கடினமாகத் தான் இருக்கும். ஆனால் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டுமானால், இத்தகைய உறுதியான முடிவுகளைத் தவிர வேறு வழி இல்லை.

எல்லாரும் கூறுவது போல எமர்ஜென்ஸி வந்தால் தான் நாடு பிழைக்குமா?

நன்றி
ஸ்ருஸல்.

குறிப்பு: இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் யாரையும் எதிர்க்கவோ / தூண்டுவதற்காகவோ அல்ல. நாட்டின் ஒற்றுமைக்கும் / இறையான்மைக்கும் இவை நலம் விளைவிக்கும் என்ற நோக்கினில் இங்கே விவரிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த நோக்கமும் அல்ல.

1 கருத்து :

Voice on Wings சொன்னது…

பிரச்சினைகள் அதிகம்தான். ஆனால் வாய்ப்புகளும் பெருகிக் கொண்டு வருவதையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். மேலும் சில பிரச்சனைகளில் நாம் தீர்வுகளை நோக்கி்ஃச் சென்று கொண்டிருப்பதையும் மறுக்க முடியாது.

வலுவான மாநில அரசுகள் விரும்பத்தக்கவையே. மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறித்துக் கொண்டு மத்திய அரசை வலுவாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. இப்போதுள்ள நிலையிலேயே மத்திய அரசு அளவற்ற அதிகாரங்களையுடையதாகவே அமைந்திருக்கிறது. ஒவ்வொன்றிற்கும் மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்தே நம் மாநிலங்களால் பல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறது.