சனி, பிப்ரவரி 20, 2010

சென்ற ஆண்டின் சிறந்த பாடல்கள்

சென்ற ஆண்டு முழுவதும் பதிவுகள் எழுத முடியாத சூழ்நிலை. ஆனாலும் பாடல்கள் கேட்பதை நிறுத்தவில்லை. சென்ற ஆண்டு நிறைய திரைப்படங்கள் வெளியானது ஆனால் பல படங்களும் சரியில்லை - பாடல்கள் இன்னும் மோசம்.

அவற்றில் சில பாடல்கள் தவறி மிகவும் நன்றாக அமைந்தன. அவற்றில், சிறந்தவை (என்னைப் பொருத்தவரை)

1. ஒரு காற்றில் அலையும் சிறகு:

'நான் கடவுள்' படம் சிறப்பான வரவேற்பை பெறாமல் போனது எனக்கு சிறிது வருத்தத்தைக் கொடுத்தது. படத்தின் இரண்டு கருக்களில், எனக்கு ஆர்யாவினை மையமாக கொண்டு இழைக்கப்பட்டிருந்த கரு பிடித்திருந்தது. என்னவொரு வேகம், கம்பீரம் அந்தப் பாத்திரத்தில். மிக அருமை. சில காட்சிகளை மிகவும் ரசித்துப் பார்த்தேன். இப்படத்தில் இடம் பெற்ற மூன்று பாடல்கள் மிகவும் அருமை.

அ) காற்றில் அலையும்
ஆ) கண்ணில்லாத
இ) ஓம் சிவா

இவற்றில் இசைஞானி பாடியுள்ள 'காற்றில் அலையும்' மிக, மிக இனிமையான பாடல்.



2. Rehna Tu

டெல்லி-6 என்ற ஹிந்தி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ரெஹ்னா தூ' என்ற பாடல் மிகவும் இனிமையான ஒன்று. இதனை ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் அழகாக பாடியுள்ளார்.



ரெஹ்னா தூ
ஹே ஜெசா தூ

என்று முடிந்ததும் தோடா... என்று பாடுமிடம் மிகவும் அழகு.

இறுதியில் ஒரு நிமிடம் (4:48 முதல்) வரும் அந்த இசை நம்மை மயக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. இது முழுவதும் Continuum என்ற வாத்தியத்தை உபயோகப்படுத்தி வாசிக்கப்பட்டது. ஏற்கனவே இதனை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடந்த சென்னை இசைக்கச்சேரி விளம்பரத்திற்காக ரகுமான் உபயோகப்படுத்தியிருந்தார். அந்த வீடியோ இதோ.




3. ஒரு வெட்கம் வருதே

ஜேம்ஸ் வசந்தின் இரண்டாவது திரைப்படம் என்று நினைக்கிறேன். சுப்ரமணியபுரத்தில் கண்கள் இரண்டால் என்ற மிகச்சிறப்பான பாடலை கொடுத்ததற்காக இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இன்று கேட்டாலும் அந்தப் பாடல் உள்ளத்தில் அவ்வளவு உற்சாகத்தைக் கொடுக்கிறது. அவரின் இன்னுமொரு அழகான பாடல்.

ஸ்ரேயா கோஷல் நன்றாக பாடியிருக்கிறார்.



இரண்டு சரணத்திலும் ஆரம்பத்தில் ராகம் மிகவும் இனிமை

2:21

மேலும் சில முறை
உன் குறும்பினில்
நானே
தோற்கிறேன்.

4. உன் மேல ஆச தான்

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மிகவும் ஏமாற்றத்தைக் கொடுத்தது - ஆனால் பாடல்கள் பரவாயில்லை. அதிலும், இப்படத்தில் 'உன் மேல ஆச தான்' பாடல் மிகவும் இனிமை - எல்லாரையும் போல எனக்கும் இப்பாடல் மிகவும் பிடித்து விட்டது.



என் எதிர ரெண்டு பாப்பா...
தினுசான கேள்வி தான்பா
கடலேறும் கப்பலப்பா
கரை தட்டி நிக்குதப்பா

நன்று.


5. Human

இது ஒரு ஆங்கில பாப் பாடல் - எந்த திரைப்படத்திலும் இடம்பெறவில்லை. மிக, மிக அருமையான, இனிமையான பாடல்.



அதுவும் ஒவ்வொரு முறையும், "Are we human or are we dancers" என்று பாடுமிடத்தில் அதனைத் தொடர்ந்து வரும் பீட் அற்புதம். மொத்தத்தில் இது ஒரு மிக இனிமையான பாடல்.

சென்ற ஆண்டு தமிழ் திரையிசைக்கு மோசமான ஆண்டு. நிறைய ரீ-மிக்ஸ் பாடல்கள், பல படங்களின் பாடல்கள் மிகவும் சுமார் என்பது எனது கருத்து. அடுத்த ஆண்டாவது நல்ல பாடல்கள் வெளியாகும் என்று நம்புவோம்.

ஸ்ருசல்.