திங்கள், பிப்ரவரி 20, 2006

காட் ஃபாதர் இசை மதிப்பீடு

ஓராண்டு கால தாமத்திற்குப் பிறகு, ரகுமான் இசையில் உருவான காட் ஃபாதர் இசை நேற்று வெளியானது. ரகுமானுக்கு தமிழில் கடைசி படம் அன்பே ஆருயிரே. இந்தியில் ரங்கு தே பசந்தி வெளிவந்தது. ரங்கு தே பசந்தியின் பாடல்களும், படமும் பலத்த வரவேற்பைப் பெற்றன. காட் ஃபாதர் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக, பாடல்கள் வரிசையைப் பற்றி எழுதியிருந்தேன். அதில் அதிக மாறுதல்கள் இல்லை. பாடல்களின் பெயரில் மட்டும் சில மாறுதல்கள்.

படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். ஆனால் மூன்று ரீ-மிக்ஸ் பாடல்களையும் சேர்த்து மொத்தம் ஒன்பது பாடல்கள். அதில் 'இன்னிசை' பாடலுக்கு மட்டும் இரண்டு ரீ-மிக்ஸ்கள்.

பாடல்கள் வரிசை:

  1. இளமை ரீ-மிக்ஸ் - சுரேஷ் பீட்டர்ஸ், அஸ்லம், பிளாசே
  2. கம்மா கரையில் - நரேஷ் அய்யர், செளம்யா
  3. காற்றில் ஒரு வார்த்தை - எஸ்.பி.பாலசுப்ரமணியன், சாதனா சர்கம்
  4. இன்னிசை - நரேஷ் அய்யர், ஸ்ரீனிவாஸ், மஹதி
  5. இளமை - அஸ்லம், தன்வி, ஷாலினி
  6. தினம் தினம் தீபாவளி - கல்பனா, சோனு கக்கர், லியோன், ஜேம்ஸ், பீர் முகமது
  7. இன்னிசை - நரேஷ் அய்யர், ஸ்ரீனிவாஸ், மஹதி
  8. தீயில் விழுந்த - ஏ.ஆர்.ரகுமான்
  9. இன்னிசை

Godfather Music Review - Music By A.R.Rahman

காற்றில் ஒரு வார்த்தை - எஸ்.பி.பாலசுப்ரமணியன், சாதனா சர்கம்

எளிமையான மெல்லிசை. இது 'காதலெனும் தேர்வெழுதி' பாடல் போலவே இருக்கிறது. போதாக்குறைக்கு இந்த பாடலைப் பாடியதும் எஸ்.பி.பி. தான். ஆனால் இரண்டு முறை கேட்டால் கண்டிப்பாகப் பிடித்துவிடும். மற்றுமொரு காதலன், காதலி உரையாடல். 'உன்னை பொட்டிற்கடியில் வைத்துப் பார்ப்பேன்; வேண்டாம் பொட்டு விழுந்தால் வெயில் அடிக்கும்', என்று கேட்டுக் கேட்டு புளித்துப் போன ரகம். சாதனா சர்கத்தின் குரல் அழகு.

தினம் தினம் தீபாவளி - கல்பனா, சோனு கக்கர், லியோன், ஜேம்ஸ், பீர் முகமது

டப்பாங்குத்துப் பாடல். தீபாவளி என ஆரம்பித்தாலே, குரல் வித்தியாசமாக இருக்க வேண்டும் போல. நாயகன் பாடலில் வரும் 'நான் சிரித்தால் தீபாவளி' பாடலில் வருவது போலவே இந்தப் பாடலிலும் பெண் குரல் சிறிது வித்தியாசமாக இருக்கிறது. 00:25-ல் வரும் இசை நன்றாக இருக்கிறது. மற்றபடி வேறெதுவும் என்னைக் கவரவில்லை.

கம்மா கரையில் - நரேஷ் அய்யர், செளம்யா

இது ஏ.ஆர்.ரகுமான் பாடல் என்று நம்ப முடியவில்லை. ராகமும், வரிகளும் சுமார் தான்.

தீயில் விழுந்த - ஏ.ஆர்.ரகுமான்

அம்மா பாடல். ரகுமானே பாடியது. நன்றாக இருக்கிறது. அருமையாகப் பாடியிருக்கிறார்.

தீயில் விழுந்த தேனா - இவன்
தீயில் வடிந்த தேனா
தாயைக் காக்கும் மகனா - இல்லை
தாயுமானவனா?
என ஆரம்பிக்கிறது.

இன்னிசை - நரேஷ் அய்யர், ஸ்ரீனிவாஸ், தன்வி, மஹதி

அருமையான மெல்லிசை, கர்நாடக சங்கீதப் பாடல். ஆரம்பத்தில் வரும், "அச்சில் வார்த்த பதுமையும் நீயே!" மிக அருமை. மஹதியும், தன்வியும் உருகிப் பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலின் ரீ-மிக்ஸ் பதிப்பின் இடையில் வரும் சில வரிகள் (தாங்கிட தாங்கிட), வெள்ளி மலரின் பாடலின் ஆரம்பத்தை ஞாபகப்படுத்துகிறது. நரேஸும் நன்றாகப் பாடியிருக்கிறார். நல்ல வரவேற்பை பெறும்.

இளமை - அஸ்லம், தன்வி, ஷாலினி

கண்டிப்பாக, படத்தின் சிறந்த பாடல் இதுவாகத் தான் இருக்கும். பெரும்பாலான ரகுமான் ரசிகர்கள், 'இன்னிசை' பாடல் தான் சிறந்த பாடல் என்கின்றனர். எனக்கென்னவோ இந்த பாடல் தான் மிகவும் பிடித்திருக்கிறது. வித்தியாசமான இசை. அசத்தும் பீட். கேட்ட முதல் முறையே பிடித்து விட்டது. அஸ்லம் அருமையாகப் பாடியிருக்கிறார். ஷாலினியின் குரல் பாடலுக்கு வளம் சேர்க்கிறது. சாதாரண வரிகள் ஆனால் நல்ல அழுத்தம்.

இளமை........
விடுகதை

பெண்களே........
விடை


கீழ்கண்ட வரிகளில் வரும் ராகம் கவர்கிறது.

தமிழ்நாட்டில் எத்தனை கிளிகள் எத்தனை கிளிகள் - கூட்டிற்குள்
வர வேண்டும் அத்தனை கிளியும் அத்தனை கிளியும் - வீட்டிற்குள்
இரவெல்லாம்........ சிறகு விரித்து கவிதை பேசுங்கள்
அதிகாலை........ அனுப்பி வைப்பேன் போங்கள்.


அனைத்து பாடல்களும் அருமை என்று சொல்ல மாட்டேன். ஆனால் இரண்டு அருமையான பாடல்கள் இருக்கின்றன. கே.எஸ்.ரவிகுமார் முயற்சித்திருந்தால் பாடல்கள் இன்னும் நன்றாக வந்திருக்கும். வித்தியாசம் 'இளமை' பாடலில் மட்டும் தெரிகிறது. நான் முன்பே குறிப்பிட்டிருந்தது போல, ரவிகுமாரின் படங்களில், ரகுமானின் பாடல்கள் எப்போதும் பெரிய அளவில் பேசப்பட்டதில்லை (ஒன்றிரண்டு பாடல்கள் ஹிட்டாகும்). அதே கதி தான் இந்தப் படத்திற்கும். மற்றுமொரு 'அன்பே ஆருயிரே'-வாகி விடுமோ என்ற பயம் ஏற்படுகிறது. வைரமுத்துவிற்கு என்ன ஆயிற்று? இயக்குநர் தேவையான அளவு உழைக்கவில்லை என்று தெரிகிறது.

எனக்குப் பிடித்த பாடல்களின் வரிசை

1. இளமை
2. இன்னிசை
3. தீயில் விழுந்த
4. காற்றில் ஒரு வார்த்தை

CD-யின் விலை : 95 வெளிமாநிலங்களில் 100. தமிழ் படங்களின் குறுந்தட்டுகள் கடந்த சில மாதங்களாக அட்டைகளில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. ஆரம்ப காலங்களில், கண்ணாடி பெட்டியில் வைத்து விற்பனை செய்தனர். பின்னர் பிளாஸ்டிக் அட்டைகளுக்கு மாறினர். இப்போது தாள் அட்டையில் (சைக்கிள் பத்திகள் வருமே அந்த அட்டையில்) வைத்து, தருகின்றனர்.வருமானத்தை பெருக்க இன்னொரு உத்தியா? குறுந்தட்டுகளை எப்படி பத்திரமாக வைத்திருப்பது?

தமிழில், யுவன், ஹாரிஸ், வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்களின் போட்டியை சமாளிக்க காட் ஃபாதர் மட்டும் போதாது. இதை விட அற்புதமான ஆல்பம் ரகுமானிடமிருந்து வர வேண்டும். 'ஜில்லென்று ஒரு காதல்', அல்லது 'சிவாஜி'-க்காக காத்திருக்க வேண்டும் போல் தெரிகிறது. ஆனால் ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற பல தரப்பட்ட கலாச்சார வேறுபாடு கொண்ட மொழிகளில் பணிபுரிந்து, அந்தந்த ரசிகர்களைத் திருப்திபடுத்தக் கூடிய இசையமைப்பாளர் ரகுமான் மட்டுமே.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் திரைப்படம், இசை சம்பந்தமாக 4 பதிவுகள் தடாகத்தில் வந்துவிட்டதால், 'காட் ஃபாதர்' திரைப்படம் பார்த்தாலும், விமர்சனம் எழுதக் கூடாது என உத்தேசித்திருக்கிறேன்.

ஸ்ருசல்

வெள்ளி, பிப்ரவரி 10, 2006

இந்தியாவின் நேர்மையற்ற முறையீடு - இன்சமாம் கதறல்

நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் ஒரு நாள் போட்டியில், பாகிஸ்தான் 40/8 என்ற வலுவான நிலையில் இருந்த போது அந்த அணியின் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக், இந்தியாவின் தலைசிறந்த பவுலர் டோனியினால் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். முன்னதாக இந்தியா 50 ஓவர்களில் 380 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிபெற இன்னும் 360 ரன்களே எடுக்க வேண்டிய நிலையில், இன்சாமின் அவுட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய அணியினர் அம்பயரிடம் அவுட் கேட்டதைப் பார்த்த இன்சமாம் பெரும் அதிர்ச்சி அடைந்து மயக்கம் அடைந்தார். பின்னர் மயக்கம் தெளிந்ததும் அம்பயரிடம் சென்று, "உங்களை இந்திய அணியினர் ஏமாற்றி விட்டார்கள். இன்று ஏப்ரல் 1-ம் தேதி. எனக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும். உங்களிடம் அவுட் எல்லாம் கேட்க மாட்டார்கள். உண்மையிலேயே அனைவருமே அடுத்த ஓவரை நான் வீசுகிறேன் என்று கூறிக்கொண்டு ஆர்வத்தில் தான் ஓடி வந்தார்கள். அதனைப் புரிந்து கொள்ளாமல் அவுட் கொடுத்து விட்டீர்கள்", என்று கண்ணீருடம் முறையிட்டார். ஆனாலும் அவரின் பேச்சை கேட்காமல் அம்பயர், "எத்தனை நாட்கள் தான் இந்தியர்களை கதற கதற தோற்கடிப்பீர்கள். அவர்களும் ஒரு மேட்சாவது ஜெயிக்கட்டும்.", என்று கூறி அவுட் கொடுத்தார்.

ஆனாலும், இன்சமாமின் வெளியேற்றம் இந்தியாவின் தோல்வியை எவ்விதத்திலும் பாதிக்காத வண்ணம் இந்திய அணியின் பவுலர்கள் பார்த்துக் கொண்டனர். இந்திய அணியினர் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் விளையாடி, இந்தியாவை வழக்கம் போல தோல்வியுறச் செய்தனர். ஆட்டத்தின் முடிவில் சோயிப் அக்தர் 32 சிக்சர்களுடன், 240 ரன்கள் குவித்து 'மேன் ஆஃப் த மேட்ச்' பட்டம் வென்றார்.

ஆட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் பேட்டியளித்த இன்சமாம்-உல்-ஹக், "ஆட்டம் இக்கட்டான நிலையில் இருந்த போது, டோனி பொறுப்பற்ற முறையில் பந்தை ஸ்டம்பை நோக்கி வீசியிருக்கக் கூடாது. ஆனாலும் பந்து வீசி விதத்தை விட, நெறிகெட்ட முறையில் இந்திய வீரர்கள் அவுட் கேட்ட விதம் தான் என்னை மிகவும் பாதித்து விட்டது. இது கிரிக்கெட்டின் மீதான மதிப்பையும், இந்தியாவின் மீதான நம்பிக்கையும் கெடுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இது போன்ற முறையற்ற, நேர்மையற்ற ஆட்டத்தை என் வாழ்நாளிலேயே கண்டதில்லை. எதற்குமே அமைதியாக இருக்கும் டிராவிட் கூட அம்பயரின் முன்னால் தரையில் விழுந்து அடம்பிடித்து அழுது அவுட் கேட்டது எனது மனநிலையை மிகவும் பாதித்து விட்டது. இந்திய அணியினர் மீது மான நஷ்ட வழக்குத் தொடரலாம் என முடிவெடுத்திருக்கிறேன். மேலும் இந்திய வீரர்கள் கங்குலி, சித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா முதலியோர் தங்களுடைய ஆதரவை எனக்குத் தெரிவித்துள்ளனர். இனி மேலாவது, டோனி போன்ற பகுதி நேர பவுலர்கள் பந்தை ஸ்டம்பை விட்டு ஒன்றிரண்டு அடிகள் தள்ளி வீசுவார்கள் என நினைக்கிறேன். டோனி ஓர் வளர்ந்து வரும் கிரிக்கெட் ஆட்டக்காரர். அவர் அகார்கர், ஜாகீர்கான் போன்ற அனுபவம் வாய்ந்த பவுலர்களிடம் எங்கே, எவ்வாறு பந்து வீசுவது எனக் கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது என்னிடமாவது கேட்டிருக்கலாம். பந்தை எங்கே வீச வேண்டுமென்று; நான் இடத்தைக் காட்டியிருப்பேன்.

1998 ம் ஆண்டு நடந்த போட்டியில் என்னை இந்திய வீரர்கள் ரன் அவுட் செய்த போது, அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால் அசாரூதீன் அம்பயரிடம் சென்று, "இன்சாமிற்கு காலில் முள் குத்தி விட்டது. அந்த வேதனையைப் பொறுட்படுத்தாமல் ஓடி வருகிறார். அதைப் பார்க்காமல் அவுட் கேட்பதற்கு நாங்கள் ஒன்றும் பகுத்தறிவில்லாதவர்கள் அல்ல. நாங்கள் அவுட் கேட்கவே இல்லை. நாங்கள் அவுட் கேட்காமல் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இன்சமாமிற்கு எப்படி அவுட் கொடுக்கலாம்', என வாதிட்டு என்னை மீண்டும் விளையாடும்படி கேட்டுக்கொண்டார். டிராவிட் போன்றோர்கள் அசாரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆண்டவன் இந்தியர்களுக்குப் பகுத்தறிவினையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் கொடுக்கட்டும்.

ஐ.சி.சி-ன் சில விதிகளும் குழப்பமாக இருக்கின்றன. சென்ற ஆட்டத்தில் டெண்டுல்கர் பந்து வீசும் போது, காற்றில் பந்து சிறிது ஆட்டம் கண்டு, ஸ்டம்பைத் தகர்த்தது. அது கூட புரியாமல் அம்பயர் அவுட் கொடுத்தார். கேட்ச், போல்ட், ரன் அவுட் போன்ற முறைகளை கிரிக்கெட்டிலிருந்து நீக்க வேண்டும்.", என ஆக்ரோஷத்துடன் கூறினார்.

செய்தி:

‘India’s appeal against spirit of the game'

Islamabad: Pakistani captain Inzamam-ul-Haq has slammed the Indian team for appealing against him for obstructing the field in the first one-day international at Pewhawar and termed it as “against the spirit of cricket”.

Inzamam was ruled out obstructing the field after he stopped a fielder’s throw with the bat while attempting to get back to his crease in the series opener on Monday.

Pakistan, chasing 329 to win, went on to win the match by Duckworth/Lewis method after their innings was cut short by three overs due to bad light.

The home captain, who became only the third person to be given out in this rare manner in ODIs, said he never imagined that the Indian squad led by Rahul Dravid would resort to “such a thing” and warned that the appeal made in “an unsportsmanlike manner” can lead to bad blood between the two teams.

Inzamam also made a veiled reference to Indian coach Greg Chappell instructing his younger brother Trevor to bowl underarm in a one-day international to prevent New Zealand from scoring a boundary off the last ball for victory in the early 1980s.

“In my role as the Pakistan captain I would say that the appeal from the Indian fielders was against the spirit of cricket.

“Certainly, there are several modes in which a batsman can be declared out, but many of them are not in the spirit of the game,” Inzamam wrote in his column in The News.

“I am particularly referring to the obstructing the field, handled the ball and hit the ball twice dismissals, also about the illegal practice of underarm bowling and running out a batsman while backing out.

“The Indian fielders appealed when the Peshawar match was in a crucial state. I would not have imagined Rahul Dravid and his team would do such a thing.

“I am not bothered about my dismissal but an appeal made in an unsportsmanlike manner by the visiting team can have an adverse affect on the relations between the two opponents.

“I have surely impressed upon my team not to make much of the Peshawar incident. However, in my personal opinion the appeal was not made in a sporting manner. Instead, it might have left a bad taste in the mouth.”

Inzamam said that the umpires’ decision was certainly according to the rules of the game, but added however that he was unable to comprehend this particular law of cricket. He said that had he not brought his bat in front of the ball it could have hit his body instead. Indian team manager Raj Singh Dungarpur told PTI that he had not seen the comments made by the Pakistani captain but assured that the team would discuss it at its meeting.

“We may also take it up with the concerned authorities if it’s warranted,” he added. PTI

ஸ்ருசல்

திங்கள், பிப்ரவரி 06, 2006

சமீபத்தில் மிகவும் ரசித்தப் பாடல்கள்

கடந்த இரண்டு மாதங்களில் மிகவும் ரசித்துக் கேட்டப் பாடல்களின் பட்டியல்.

1. உன்னைக் கண்டேனே

படம்: பாரி ஜாதம்
பாடியவர்கள்: ஹரிச்சரண், சுருதி
இசை: தரண்

பாக்யராஜ் மிகச் சிறந்த கதாசிரியர். தனது மகளின் அறிமுகத்திற்காக அதிக சிரத்தையெடுத்து வருகிறார். பார்க்கலாம் திரைப்படம் எப்படி அமைகிறதென்று! கவர்ந்திழுக்கும் பெண் குரல். ஹரிச்சரணும் ('உனக்கென இருப்பேன்' புகழ்) நன்றாகப் பாடியிருக்கிறார். பாடலின் வரிகள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். 'ஏங்கினேன், தேங்கினேன்', ராகம் நன்றாக இருக்கிறது. பாடலின் ஆரம்பத்தில் வரும் இடி, மின்னல் சத்தத்தைக் கேட்கும் போது, தில் சே (உயிரே) படத்தின் எழுத்துப் (Title) பகுதியில் வரும் இசை ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அதில் இசை இடி & மின்னலாக ஆரம்பித்து, 40 வினாடிகளுக்குப் பிறகு மாறும் வயலின் இசை இதமாக இருக்கும்.

2. தாவணி போட்ட தீபாவளி

பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், ஸ்ரேயா கோஷல்
படம்: சண்டக் கோழி
இசை: யுவன் சங்கர் ராஜா

நல்ல பாடல். ராஜாக்களின் பேவரைட் பாடகி ஸ்ரேயா வழக்கம் போல சிறப்பாகப் பாடியிருக்கிறார். "விட்டுடு, விட்டுடு..." நல்ல ராகம். ஆரம்பத்தில், இந்த படத்தின் பாடல்களைக் கேட்கும் போது, எதுவுமே பிடிக்கவில்லை. இந்தப் பாடல் கூட ஏற்கனவே கேட்ட பாடலின் சாயல் இருந்ததால். பின்னர் தொலைக்காட்சியில் பார்க்கும் போது, இந்தப் பாடல் பிடித்து விட்டது. இந்தப் பாடல் மிகவும் நன்றாகவும், தெளிவாகவும் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் ஜேசுதாஸ், மது பாலகிருஷ்ணன், உன்னிமேனன் உள்ளிட்ட கேரளப் பாடகர்களின் குரல் அனைத்தும், ஜேசுதாஸின் குரல் போலவே இருப்பதால், வேறுபடுத்துவது சிரமாக இருக்கிறது. ஓர் மலையாளியிடம், அவருக்கு அதே சிரமம் இருக்கிறதா என வினவிய போது, "எங்களுக்கு அவர்கள் குரல் நல்ல பழக்கம் இருப்பதால், உங்களுக்கு இருப்பது போல சிரமம் கிடையாது. குரல் ஒன்று போல இருப்பதற்குக் காரணம்; இப்பொழுது இருக்கும் பாடகர்களுக்கும், பாடகராக முயற்சி செய்யும் எல்லாருக்குமே ஜேசுதாஸ் போல வர வேண்டும், பாட வேண்டும் என்ற வேட்கை உண்டு. அது, இந்த ஒற்றுமைக்குக் காரணமாக இருக்கலாம்", என்றார்.

3. நெஞ்சாங்கூட்டில்

படம்: டிஸ்யூம்
பாடியவர் : ஜெயதேவ், ராஜலக்ஷ்மி
இசை: விஜய் ஆண்டனி

படத்திற்குப் பாடல்கள் பெரிய பலம். பாடல்களுக்காகத் தான், திரைப்படம் பார்க்க சென்றேன். எதிர்பார்த்ததை விட படம் நன்றாகவே வந்திருக்கிறது. விஜய் ஆண்டனி கவனிக்கப்பட வேண்டியவர். 'நெஞ்சாகூட்டில்..நெஞ்சாகூட்டில்..நெஞ்சாகூட்டில் நீயே நிற்கிறாய்' என்று இழுக்கும் போது பின்னணியில், பிலிம் சுருளை இழுப்பது போல் வரும் இசை வித்தியாசமாக இருக்கிறது.

4. நூவு நேனு கலிசுண்டே நாக்கு எந்த இஷ்டம்.

படம்: கங்கோத்திரி
இசை: கீரவாணி
பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியன், மாளவிகா

சில மாதங்களுக்கு முன்பு அகன்ற வழி இணையத் தொடர்பு கொடுப்பவருக்கு தொலைபேசி செய்த போது, அவர் வைத்திருந்த ரிங் டோனில் இசைத்த பாடல் மிகவும் அருமையாக இருந்தது. ஆனால் அது ஒரு தெலுங்கு பாடல். அலுவலகத்தில் பணிபுரியும் நண்பருக்கு, அந்த எண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்து அந்தப் பாடல் என்ன திரைப்படம் என்று கூறுமாறு கேட்டேன். விடையுடன், பாடலும் கிடைத்தது. என்ன ஒரு அருமையான மெல்லிசைப் பாடல்!. நீண்ட நாட்கள் கழித்து மீண்டும், சென்ற வாரம் முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தேன். சலிக்கவே சலிக்காத பாடல்.

5. தாஜ்மஹால் ஓவியக் காதல்

பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன், மதுமிதா
படம்: கள்வனின் காதலி
இசை: யுவன் சங்கர் ராஜா

இந்தப் படத்தின் குறுந்தட்டை வாங்கும் போது, வாங்கலாமா, வேண்டாமா என்ற தயக்கம் இருந்தது. சரி பாடல் நன்றாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, லஜ்ஜாவதியே, நியூ பாடல்கள் இணைப்பாகக் கிடைக்கிறதே என்ற நம்பிக்கையில் வாங்கினேன். இரு பாடல்கள் நன்றாக இருந்தது. 'ஏனோ கண்கள்' மற்றுமொரு பாடல். சாதனா சர்கத்தின் குரல், அழகு! யுவனின் இசையில், கடந்த சில மாதங்களில் மட்டும் சண்டக்கோழி, புதுப்பேட்டை, அகரம், கள்வனின் காதலி படங்கள் அடுத்தடுத்து வந்து விட்டன. இதனால் தான் ஒரு சில பாடல்களைத் தவிர்த்து மற்ற பாடல்கள் வரவேற்பு பெறத் தவறுவது போல் தோன்றுகிறது.

6. ஒரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடிப் போகாது

பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
படம்: புதுப்பேட்டை
இசை: யுவன் சங்கர் ராஜா

மற்றுமொரு சோகம் ததும்பிய தத்துவப்பாடல், யுவனிடமிருந்து. பாடலின் வரிகள், பாடிய விதம், இவற்றை விட, இந்த பாடலின் சிறப்பிற்குக் காரணம் இசை. அதுவும் இரண்டு சரணங்களுக்கும் முன்பு வரும் வயலின், அருமை அருமை. முக்கியமாக 4:00 - 4:24 வரை. சமீபத்தில் இப்படியொரு வயலின் இசையைக் கேட்டதில்லை.

7. ரூபரூ
பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான், நரேஷ் அய்யர்
படம்: ரங்கு தே பசந்தி
இசை: ஏ.ஆர்.ரகுமான்

இந்தப் பாடலைப் பற்றியும், இது எடுக்கப்பட்ட விதத்தைப் பற்றியும் ஏற்கனவே ரங்கு தே பசந்தி இசை மதிப்பீட்டில் எழுதி விட்டேன். இந்தப் பாடலைப் பற்றி ரகுமான் இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். "இந்தப் பாடலை நான் பாடுவதற்கு முன்பாக, நரேஷ் அய்யரை வைத்து பதிந்து பார்த்ததில் அது சிறப்பாக வரவே அதையே பயன்படுத்தினேன். அதனால் தான் ஒரு சில வரிகள் மட்டுமே நான் பாடுவதை நீங்கள் கேட்கிறீர்கள். மேலும் 'ஹேய் சாலா' என்றெல்லாம் விழித்து பாடுவது எனக்கு சவுகரியமாக இருக்காது". இளமை ததும்பும் குரல், இசை.

8. கேட்கலியோ கேட்கலியோ

படம்: கஸ்தூரி மான்
பாடியவர்கள்: திப்பு, மஞ்சரி மற்றும் குழுவினர்
இசை: இளையராஜா

என்ன ஒரு அருமையான பாடல்! பெண் குரல் மட்டும் இன்னும் சிறிது நன்றாக இருந்திருக்கலாம். கோரஸ் மிக மிக அருமை (முக்கியமாக ஆரம்பத்தில்). உருக வைக்கும் இசை. இதே படத்தில் வரும் "நேத்து வரைக்கும்" (சுஜாதா பாடியது) பாடல், சிறைச்சாலையில் வரும் "ஆலோங்கிளித் தோப்பிலே" பாடல் போலவே இருக்கிறது.

ஸ்ருசல்

புதன், பிப்ரவரி 01, 2006

காட்பாதர் - இசை வெளியீடு

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் காட் பாதர் திரைப்படத்தின், இசை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. சென்ற வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே, இப்போது வெளியிடப்படும், அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தள்ளிப் போடப்பட்டு வந்த இசை வெளியீடு கடைசியாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு வந்து விட்டது. படத்தின் தாமதத்திற்கு, அஜீத்குமார் ஒப்புக்கொண்டிருந்த மற்ற படங்கள், தயாரிப்பாளர் - அஜீத் மோதல், அஜீத்தின் திடீர் உடல் எடை குறைவு(ப்பு) முதலான காரணங்கள் சொல்லப்பட்டன.



பாடல்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே இசையமைக்கப்பட்டது, அதன் தரத்தை எவ்விதத்திலும் பாதிக்காது என நம்புகிறேன். கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில், ரகுமானின் இசையில் பாடல்கள் எப்போதும் பெருமளவில் பேசப்பட்டதில்லை. ஒன்றிரண்டு பாடல்கள் வரவேற்பைப் பெறும். உதாரணத்திற்கு முத்து, படையப்பா மற்றும் தெனாலி.

காட்பாதர் படத்தில் கீழ்கண்ட பாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. (இது உறுதிசெய்யப்படாத தகவல்)

இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடல்கள்: கவிஞர் வைரமுத்து

பாடல்கள் வரிசை:

காற்றில் ஒரு வார்த்தை - எஸ்.பி.பாலசுப்ரமணியன், சாதனா சர்கம்
டீரீம் தீபாவளி - கல்பனா, சோனு கக்கர், லியோன், ஜேம்ஸ், பீர் முகமது
தீயில் விழுந்த - ஏ.ஆர்.ரகுமான்
இன்னிசை (Film Mix) - நரேஷ் அய்யர், ஸ்ரீனிவாஸ், மஹதி
இளமை - அஸ்லம், தன்வி, ஷாலினி
ஊஹா - நரேஷ் அய்யர், செளம்யா
இன்னிசை - குழுப்பாடல்
இன்னிசை (Radio Mix) - நரேஷ் அய்யர், தன்வி, மஹதி
இளமை (Remix) - அஸ்லம், தன்வி, ஷாலினி

மிருதங்கம்: சீனு
பக்கவாத்தியம்: ஸ்ரீனி

Additional Programming: சஞ்சய்
Additional Mixing: சுரேஷ் பீட்டர்ஸ்
Recorded At: பஞ்சதன் ரெக்கார்ட்ஸ் இன், A. M ஸ்டுடியோஸ்
Sound Engineer: H. ஸ்ரீதர், S. சிவகுமார்.
Asst. Sound Engineer: ஆதித்ய மோடி, கார்த்திக். V

ஸ்ருசல்