செவ்வாய், ஜூன் 19, 2007

லாம்... கலாம்... திரும்பலாம்... திரும்ப வரலாம்....

மூன்றாவது அணி, தற்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே அடுத்த ஜனாதிபதியாகவும் நீட்டிக்க வேண்டும் என்று கூறி அவரை தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டிருக்கிறார்கள்.

1. கலாம் போட்டியிடுவாரா?
2. அவருக்கு பி.ஜே.பி அல்லது தேசிய முற்போக்கு கூட்டணியினரின் (சில கட்சிகளிடமிருந்து) ஆதரவு கிட்டுமா?
3. தி.மு.கவின் நிலை என்ன?
4. அப்படியே அவர் ஜெயித்தாலும் இந்த ஐந்து வருடங்களில் செய்ய இயலாததை அடுத்த முறை என்ன செய்ய முடியும்?

என்று பல கேள்விகள்.

நேற்றைய செய்திகள் எல்லாம், இரா. செழியன் அல்லது தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி ஆகிய இருவரில் ஒருவர் மூன்றாம் அணியின் சார்பில் நிறுத்தப்படலாம் என்று கூறியிருந்தன. இதற்கு எதற்கு கூட்டம் எல்லாம்? எப்படியும் தோற்க போகிறார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நானும் நிற்கிறேன் என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம் என்று நினைத்தேன். இன்றைய செய்தி சற்றும் எதிர்பாராத விதமாகவும், ஆச்சர்யமளிக்க செய்யும் வகையிலும் இருக்கிறது. ஜெ.யிடமிருந்து இப்படி ஓர் அறிக்கையா என்று வியப்பு. தலைப்பை பார்த்ததுமே பல விசயங்கள் புரிந்தது.

1. நல்ல முடிவு (எப்படி இவர்களிடமிருந்து? :))
2. ஜெ. மற்றும் கூட்டணியினர் கருணாநிதிக்கு வைத்த செக்

மூன்றாம் அணியென்று ஒன்று இருக்கிறதா என்று கேட்ட பலருக்கு, இந்த அறிக்கை மூலம் ஓர் நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது. சிறந்த முடிவு.

கலாமினால் சிறப்பாக செயல்பட முடியுமா, முடியாதா என்ற கேள்விகள் ஒரு புறம் இருந்தாலும் கூட நான் கேள்விப்பட்ட விசயம் உண்மையாக இருக்குமெனில் அவர் ஜனாதிபதியாக வருவதற்கு தான் எனது ஓட்டு. (கள்ள ஓட்டு ஜனாதிபதி தேர்தல்ல போட முடியாதோ?. இரு கழகத்தினரும் சிந்திக்க வேண்டிய விசயம்.).

சென்ற பாராளுமன்ற தேர்தலில், சோனியா காந்தி பிரதமராக வரும் வாய்ப்பிருந்த போது அதனை ஏற்க மறுத்து விட்டார் என்பதே. காலையில் அலுவலகம் செல்லும் போது, 'சோனியா தான் பிரதமரா', என்று விரக்தியுடன் சென்ற எனக்கு மாலை வீடு திரும்பும் போது கேட்ட செய்தி இனிப்பாக இருந்தது.

'மன்மோகன் சிங் பிரதமர்; சிதம்பரம் நிதித்துறை (அப்போது கேட்க நன்றாக இருந்தது). மனச்சாட்சியின் படி பதவியை உதறிவிட்டார் சோனியா', என்று இருந்தது.

கலாம் போட்டியிடுவாரா?

கலாம் போட்டியிட வாய்ப்புகள் குறைவு. பி.ஜே.பி செய்தி தொடர்பாளர் சுஷ்மா சுவராஜ், 'இரண்டு மாதங்களுக்கு முன்பே கலாம் தேர்தலில் நிற்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்த போது, 'போட்டியில்லாமல் தேர்வானால் சம்மதம்', என்று கலாம் கூறியதாக தெரிவித்திருந்தார். மேலும் பி.ஜே.பி பைரன் சிங் செகாவத்திற்கு தனது ஆதரவை உறுதி செய்தது போல் தெரிகிறது. ஆனால் இன்றைய பேட்டியில் செகாவத், 'கலாம் தேர்வானால் மகிழ்ச்சி', என்று தெரிவித்திருக்கிறார். அவர் உண்மையிலேயே அப்படி விரும்பி இருந்தால் சென்ற மாதமே கூறியிருக்க வேண்டும். பெண் வேட்பாளரிடம் தோல்வியுற பயந்து இப்போது கலாமிற்கு ஆதரவு தெரிவிப்பது போல் தெரிகிறது. சரி, அவர் அப்படியே விரும்பி போட்டியிலிருந்து விலகி, பி.ஜே.பி கலாமிற்கு ஆதரவு தெரிவித்தால் போட்டியிட வாய்ப்பு உண்டு. இரண்டும் நடக்க 50% வாய்ப்பிருக்கிறது. (பி.ஜே.பியும் கலாமின் மீது வருத்தத்தில் இருந்ததாக நினைத்திருந்தேன்.)

அவருக்கு பி.ஜே.பி அல்லது காங்கிரஸ் கூட்டணியினரின் ஆதரவு கிட்டுமா?:

ஷெகாவத் விலகினால். பி.ஜே.பியிடமிருந்து வாய்ப்புகள் கிட்ட பிரகாசம். யு.பி.ஏ அணியில் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்காது. நான் மேற்கூறிய காரணம் உண்மையாக இருக்கும் பட்சத்தில். (சோனியா பிரதமராவதை கலாம் தடுத்தார் என்பது). என்னதான் மனசாட்சி என்று மழுப்பினாலும், மனக்குறை இருக்க தானே செய்யும். ஆகையினால் கலாம் மீண்டும் ஜனாதிபதியாக வருவதை விரும்ப மாட்டார் சோனியா. கம்யூனிஸ்டுகள் ஆதரவு தரவும் வாய்ப்புகள் குறைவு. (சோம்நாத் சட்டர்ஜி துணை ஜனாதிபதியாக போட்டியிட விரும்புவதாக கேள்வி).

ஷெகாவது தற்போது அடிக்கடி முணுமுணுக்கும் பாட்டு:

'பொறந்தாலும்
ஆம்பளையா பொறக்க கூடாது.
அப்படி பொறந்து விட்டா
பொம்பளைட்ட தோற்க கூடாது.'


3. தி.மு.கவின் நிலை என்ன?

ஜெ. மற்றும் அவரது கூட்டணியினடமிருந்து வந்த அறிவிப்பு நிச்சயம் தி.மு.க விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பது உண்மை. ஆனால் கருணாநிதி வழக்கம் போல் ஏதாவது கூறி மழுப்பி விடுவார்.

'பெண்கள் இச்சமூகத்தின் கண்கள்;
அவர்கள் இதுவரை ஜனாதிபதி பதவியில் அமரவில்லை என்பது அக்கண்களில் ஏற்பட்ட
புண்கள்'.


மேலும், 'சென்ற முறை கலாம் ஜனாதிபதியாக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்ததே நான் தான்', என்றும் கூறி விடுவார்.

கருணாநிதியும் கண்டிப்பாக கலாமிற்கு ஆதரவு அளிக்க
மாட்டார். சட்டசபை (தன்) பொன்விழாவிற்கு, தான் அழைத்தும் அதில் பங்கேற்க மறுத்து
விட்டார் என்ற காரணத்தினால். மேலும் கருணாநிதி சொல்வதை ஜெ.வும், ஜெ. சொல்வதை
கருணாநிதி ஏற்பதையும் வரலாறு இது வரை கண்டதில்லையே!

'என்ன தலைவரே பேசுறீங்க... இப்படி தான் போன
மாசம் நம்ம இருளப்பன் காட்டிக் கொடுத்தான்.. அப்புறம் அவனை ஓட ஓட சந்தனம் விரட்டி
கொன்னதெல்லாம் நம்ம சோனமுத்து கண்ல வந்து போகும்ல...... இம்ம்... இம்ம்.. சொல்றா
நான் இருக்கேன் பாத்துக்குறேன்... யார் திருடுனான்னு சொல்லு' - வடிவேலு)



4. அப்படியே அவர் ஜெயித்தாலும் இந்த ஐந்து வருடங்களில் செய்ய
இயலாததை அடுத்த முறை என்ன செய்ய முடியும்?

இது முக்கியமானது. இதுவரை ஜனாதிபதியாக ஏதாவது செய்திருக்கிறாரா என்று யோசித்து பார்த்தால், அதிகமில்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் அப்பதவியில் அமர்ந்து கொண்டு அவ்வளவு தான் செய்ய முடியும் என்பதே உண்மை. பாகிஸ்தான் அதிபர் போல், பாராளுமன்றத்தை கலைத்து விட்டு அதிபராட்சி எல்லாம் இந்தியாவில் தற்சமயம் சாத்தியமில்லை. அது அவசியமில்லாததும் கூட.

கலாமின் ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

1. சியாச்சின் செல்கிறார்.
2. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சென்று மக்களையும், போர் வீரர்களையும் சந்திக்கிறார்.
3. போர் விமானத்தில் பறக்கிறார்
4. ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு சென்று லட்சக்கணக்கான குழந்தைகளை சந்தித்திருக்கிறார்.
5. அறிவியல் மாநாடுகளில் கலந்து கொண்டு அடுத்த பத்து, இருபது வருடங்களில் என்ன செய்ய வேண்டும் என்று விவாதிக்கிறார். அவருடைய Presentation காணும் வாய்ப்பு கிட்டியது.

ஜனாதிபதி என்றாலே தினமும் எழுந்து, உண்டு, பலரை சந்தித்து தூங்கிய பலருக்கு மத்தியில் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற அவரது ஆர்வம் பாராட்டத்தக்கது. அவரால் முடிந்ததை செய்கிறார். மேலும் மெயில்களுக்கு பதில் எழுதுகிறார். பாதிக்கப்பட்டவர்கள் மெயில்களின் மூலம் அவரை தொடர்பு கொண்டதன் விளைவாக, பல நடவடிக்கைகள் எடுக்க காரணமாயிருந்திருக்கிறார்.

ஆனால் பிரதீபா வருவதற்கு தான் 80% வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்படி ஒருவர் இருப்பதே பலருக்கு ஏன் மீடியா, அரசியல்வாதிகளுக்கே ஒரு வாரத்திற்கு முன்பாக தெரியவில்லை. அதற்கு முன்பாக, மஹாராஷ்ரா, ராஜஸ்தான் என்று பல இணையத்தளங்களில் வரிந்து கட்டிக்கொண்டு சண்டையிடுகிறார்கள். தமிழனும் தன் பங்கிற்கு முட்டி பார்க்கிறான்.

சிரித்த கமெண்ட்:

Patil as rashtrapatniby khatta
sambhar on Jun 19, 2007 04:02 AM


Jai Maharashtra


RE:Patil as rashtrapatni by Laker on Jun 19, 2007 04:05 AM

Jai Andaman Nicobar Island


RE:Patil as rashtrapatni by kumar on Jun 19, 2007 04:16 AM

Jai Andaman Nicobar Theevu


RE:Patil as rashtrapatni by Adobe on Jun 19, 2007 05:05 AM

jai Goa


RE:Patil as rashtrapatni by Indian Citizen on Jun 19, 2007 05:07 AM

jai jhumri talaiya

இந்த குசும்பு மட்டும் இல்லையென்றால் இந்தியாவும்,
தமிழ்நாடும் (மூன்றாவது எழுதியவர் நம்மவர். Jai Andaman Nicobar Theevu :))..
முதலில் கமெண்ட் எழுதியவரை அதன் பிறகு காணவில்லை.

-------------------------------------------------------


சரி.... எது நடக்கும்னு யார் உங்கிட்ட ஆருடம் கேட்டா? வேலை இல்லை.. ஏதோ
முக்கியமான நிகழ்வை பதிந்து வைப்போம் என்று பதிகிறேன்.

கருத்துகள் இல்லை :