நீண்ட நாட்களுக்குப் பிறகு (அதாவது சிவாஜிக்குப் பிறகு), ஏ.ஆர்.ரகுமான் இசையில் தமிழில் ஓர் திரைப்படம். படத்தின் பாடல்கள் சென்ற வாரம் சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இன்னும் இசைத்தட்டு கைக்கு வரவில்லை. பாடல்களை, ஏதோ ஒரு புண்ணியவான், யூடியூப்பில் வெளியிட்டிருந்தார். அதனை நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்தார். அவருக்கு நன்றி. இருவரின் புண்ணியத்திலும் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் விடாமல் கேட்க முடிந்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, ரகுமானிடமிருந்து வித்தியாசமான ஆல்பம். சிவாஜியின் பாடல்கள் என்னை மிகவும் கவரவில்லை. ஆனால், 'சில்லென்று ஒரு காதல்' படத்தின் பாடல்கள் மிகவும் பிடித்திருந்தன - அவற்றை இன்னும் கேட்டுக்கொண்டிருக்கின்றேன். இந்த ஆல்பத்தில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது. அது என்னவென்று கூறமுடியவில்லை. படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். அவற்றில் இரண்டு பாடல்கள், 'மீனாட்சி' என்ற இந்தி படத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. பாடல்களைப் பற்றிய எனது மதிப்பீடு.
1. ஏலே (3 / 5)
பாடியவர்கள்: கிரிஷ், நரேஷ் அய்யர்
பாடலை எழுதியவர்: நா.முத்துக்குமார்
நண்பர்கள் பாடும் பாடல். இப்படத்தில் இரண்டு நண்பர்கள் பாடும் பாடல்கள் உள்ளன. 'டாக்ஸி டாக்ஸி' மற்றுமொரு பாடல்.
'ஏலே
நேரம் வந்திடுச்சு ஏலே
உலகம் காத்திருக்கு வாலே
கதவை திறந்து போலே
புதையல் பங்கு போட வா
வாழ்க்கை என்னும் கேமராவில் நாம்
புன்னகை என்னும் புகைப்படம் எடுப்போம்'
என்று தொடங்கி செல்லும் 'ஏலே' என்ற இந்த பாடல் ஒரு சாதாரண பாடல். இப்பாடலில் எதுவே என்னைக் கவரவில்லை என்ற உண்மையைக் கூறியே ஆக வேண்டும். ரங் தே பசந்தியில் இடம் பெற்ற 'ரூபாரூ' பாடலினை இப்பாடல் ஞாபகப்படுத்துவதாலும், அப்பாடலின் இனிமை பாதி கூட இதில் இல்லாத காரணத்தினாலும் இருக்கலாம்.
2. நான் எப்போது பெண்ணானேன் (4 / 5)
பாடியவர்: ரீனா பரத்வாஜ்
பாடலை எழுதியவர்: பா.விஜய்
இப்பாடல் 'மீனாட்சி' படத்தில் இடம் பெற்ற 'ஏ ரிஸ்தா கியா' என்ற பாடலின் தமிழாக்கம். படத்திற்கு முதலில் ஹிந்தி பாடல்களை மட்டுமே பயன்படுத்துவதாக எண்ணம் இருந்ததாவும், அப்போது பதிவு செய்யப்பட்ட இரு பாடல்களில் இது ஒரு பாடல் என்று ரகுமான் விழாவில் தெரிவித்திருந்தார். இன்னொரு பாடல், 'சின்னம்மா சிலுக்கம்மா'.
உண்மையைக் கூற வேண்டுமானால், இது ஒரு அற்புதமான மெலோடி பாடல். மிக அற்புதமான மெல்லிசைப் பாடல். இப்பாடலை பல மாதங்களாக இந்தியில் கேட்டு வருகிறேன். பிடித்தமான பாடல்களில் ஒன்று. அற்புதமான இசை; அற்புதமான குரல். தமிழில் இப்பாடலைக் கெடுத்த பெருமை கவிஞர் பா.விஜய் அவர்களைச் சாரும். இப்படி கூட ஒரு பாடலை எழுத முடியுமா என்பதை அவரிடம் தான் தெரிந்து கொள்ள வேண்டும், என்பது எனது கருத்து. ஏனோ பாடலும், வரிகளும் ஒட்டவில்லை என்பது எனது கருத்து. 'ஜோதா அக்பர்' படத்தின் பாடல்களைக் கூட இவர் தமிழில் சரியாக மொழி பெயர்க்கவில்லை என்பது எனது கருத்து. வைரமுத்து அவர்கள், 'குரு' படத்தின் பாடல்களை மிகவும் அற்புதமாக (வழக்கம் போல்) தமிழில் மொழி பெயர்த்திருந்தார்.
'நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
முதல் புன்னகை பூத்தது அப்போதா
முதல் வார்த்தை பேசிய அப்போதா
அவள் விளக்குகள் ஏற்றிய திருநாளில்
அன்னை தேவதை என்றாய் அப்போதா
என் உறக்கத்தின் நடுவில் சின்ன பயம்'
எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. உங்களுக்குப் பிடிக்கலாம் - நீங்கள் ஹிந்தியில் கேட்டிருக்காவிடில் - பிடித்துப் போக வாய்ப்புகள் அதிகம். ஆனால் இப்பாடலின் இசை மிகவும் சொல்லப்பட வேண்டிய ஒன்று. ரீனா பரத்வாஜூம் மிகவும் அற்புதமாகப் பாடியிருக்கிறார். (ஹிந்தியிலும் இவரே பாடியிருக்கிறார்). ஆரம்பத்தில் 'ஹீம் ஹீம் ஹீம்' என்று இவர் பாடலை ஆரம்பிக்கும் அழகே தனி.
3. சின்னம்மா சிலுக்கம்மா (4 / 5)
பாடியவர்கள்: பென்னி தியோல், சின்மயி
பாடலை எழுதியவர்: பா.விஜய்
இது மீனாட்சி படத்தில் மிகவும் புகழ்பெற்ற பாடல். இந்தியில் சுக்விந்தர் சிங் அற்புதமாக பாடியிருப்பார். மேடைகளில் அவர் இப்பாடலை பாடும் அழகே தனி. தமிழில் ஆண், பெண் இருவரின் குரலும் பரவாயில்லை. சின்மயியின் குரல், ரெய்ஹானாவின் குரலை ஞாபகப்படுத்துகிறது. ஆனால் மிகவும் வித்தியாசப்படுத்திப்பாடியிருக்கிறார்.
இப்பாடலின் பீட்டும், இசையும் அற்புதம்.
"சின்னம்மா சிலுக்கம்மா நில்லு நில்லு
சேலம்மா சிலையம்மா சொல்லு சொல்லு
சின்னம்மா சிலுக்கம்மா நில்லு நில்லு
சேலம்மா சிலையம்மா சொல்லு சொல்லு"
என்று (00:30)-ல் ஆரம்பித்து (00:52)-ல்
'அம்மம்மா அழகம்மா
அடி நெஞ்சில் யாரம்மா
விழியம்மா மொழியம்மா
<ஏதோ> எவனம்மா'
என்று மாறும் போதும், 3:05-ல் 'நீ உருகி வந்திடும் தங்கம்' என்று மாறுமிடத்தில் ராகம் அற்புதம்.
அதே போல் முதல் சரண்த்திற்கு முன்பு. 2:13'- 'டிட்டு டிட்டு' என்று ஆரம்பித்து 2:25-ல் டிரம்ஸ்-ஆக மாறும் போது இசை அபாரம். மிகச் சிறந்த பாடல். தமிழில் கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. பாடியவர்களும், பாடலை எழுதியவரும் நன்றாக அவர்களது பணியைச் செய்திருந்தால் இப்பாடல் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
4. மருதாணி (5 / 5)
பாடியவர்கள்: மதுஸ்ரீ, ஏ.ஆர்.ரகுமான்
பாடலை எழுதியவர்: வாலி
இப்படத்தின் சிறந்த பாடல் இது தான் என்று உறுதியாக கூறுவேன். அற்புதமான மெலோடி - சிறந்த இசை - மதுஸ்ரீ மிகச் சிறப்பாக பாடியிருக்கிறார். பிரிந்த காதலன் (அல்லது காதலுடன் சண்டையிட்டு தன்னையே திட்டிக்கொள்ளும்), நாயகி பாடும் பாடல். இப்பாடல் முழுமையாக அற்புதமான பாடல். இப்பாடலை கேட்ட மாத்திரமே பிடித்து விட்டது.
பாடலின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை 'டிட்டுடு டிட்டுடு' என்று அற்புதமான பீட் தொடர்கிறது - கேட்பதற்கே அற்புதமாக இருக்கிறது. பாடலுக்கு பெரும் பலம் அந்த பீட். அந்த பீட்டைத் தொடர்ந்து குழுவினர் 00:11-ல் 'ஹான்ன்ன்ன் ஹா ஆ ஆ ஆ' என்று ஆரம்பிப்பதே இதமாக இருக்கிறது. அவர்களைத் தொடர்ந்து 'மதுஸ்ரீ' 'மருதாணி விழியில் ஏன்?' என்று ஆரம்பிக்கும் போது காதில் தேன் வந்து பாய்வது போல் இருக்கிறது.
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி (இது புரியவில்லை)
கங்கை என்று கானலைக் காட்டும்
கானல்
காதல் என்று கங்கையைக் காட்டும்
வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி (இது புரியவில்லை)
காதல் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையானப் பாடல் தான்
அதன் ஓசை என்னாளும் ஓயாது
வாலி மிக அற்புதமாக, பாடலுடன் ஒன்றிப்போகும்படி எழுதியிருக்கிறார். அற்புதம்.
முதல் சரணத்தை ஒட்டி வரும் பியானோ இசையை மற்றுமொரு ரகுமான் பாடலில் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் என்னால் ஞாபகத்திற்கு கொண்டு வரமுடியவில்லை. அதே போல் இரண்டு சரணத்திலும் ஓஹோ தார ரா ரா ரா ரா ரா ரா தா ரீ ரா' (2:48, 4:19) ரகுமான் பாடுவது பாடலுக்கு வளம் சேர்க்கிறது. அற்புதம்.
மொத்தத்தில் இது ஒரு மிகச் சிறந்த பாடல்.
5. டாக்ஸி டாக்ஸி (5 / 5)
பாடியவர்கள்: பென்னி தியோல், பிளாசே, Viviane Chaix
பாடலை எழுதியவர்: வாலி
இது மற்றுமொரு நண்பர்கள் பாடும் பாடல். ஆனால் முதல் பாடலைப் போல் சாதாரணப் பாடல் அல்ல. இப்பாடல் 'முஸ்தாபா முஸ்தா' + 'முக்காலா முக்காப்புலா' பாடலின் கலவை என்றும் கூறலாம். பீட்டில் தூள் பரத்தியிருக்கிறார் ரகுமான். இது ரகுமானுக்கு 'சிக்குபுக்கு', 'முக்காலா' போன்று புகழை இப்பாடல் நிச்சயமாக பெற்றுத்தரும். ஆனால் பாடலின் பீட் மட்டும் எங்கேயோ கேட்டது போல் இருக்கிறது.
'ராசி ராசி
நண்பன் கிடைத்தால்
எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி
நண்பா நீ ஒரு
இலவச டாக்ஸி
நீ நீ இல்லையேல்
நான் நான் எங்கு போவது
தோள் சாய தோள் இல்லையேல்
என் வாழ்க்கை
என்னாவது'
'நான் மம மம' என்று ஆரம்பிக்கும் போதே பாடலில் வித்தியாசம் தெரிகிறது. அந்த பிரெஞ்ச் பாடகி பாடலுக்கு வளம் சேர்த்திருக்கிறார் 'நான் மம மம' என்று ஆரம்பத்தில் பாடும் போதும் சரி, நடு நடுவில் 'ஊலா ஊலாலா' (1:40) என்றும், 'ஞன்சமிஞ்சா ஞன்சமிஞ்சா' என்று பாடும் போதும் சரி, மிக இனிமையாக இருக்கிறது. அதே போல் பென்னி தியோலும், பிளாசேயும் நன்றாக பாடியிருக்கிறார்கள். முதல் சரணத்திற்கு முன்பு வரும் இசை (1:50 - 2:15) ஆஹா. அற்புதம். என்ன வாத்தியம் என்று தெரியவில்லை - மிக இனிமை.
மொத்தத்தில் அற்புதமான பாடல்.
6. ஐ மிஸ் யூ டா (3 / 5)
பாடியவர்கள்: சின்மயி
பாடலை எழுதியவர்: நா.முத்துக்குமார்
நாயகனை நினைத்து நாயகி பாடும் பாடல். சின்மயி பாடியிருக்கிறார். இசை, பாடிய விதம் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் இன்னும் என்னைக் கவரவில்லை. ஆரம்பத்தில் வரும் இசை, 'தாஜ்மஹால் ஓவியக் காதல்' (யுவன் சங்கர் ராஜா) பாடலை ஞாபகப்படுத்துகிறது.
தாராளமாக சி.டியை வாங்கலாம் - வருத்தப்படமாட்டீர்கள்.
music லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
music லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், ஜூலை 15, 2008
திங்கள், மே 21, 2007
சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்
1. பிரே ஃபார் மீ பிரதர் (Pray for me Brother)
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், பிளாசே, மற்றும் குழுவினர்.
இப்பாடலின் காரணத்தைப் பற்றி நான் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. இப்பாடல் இந்தியாவில் வெளிவருவதற்கு முன்பாக பல இணையத்தளங்களில் விற்பனைக்காக இருந்தது. நானும் வாங்கி ஒலிக்க முயற்சி செய்த போது, விண்டோஸ் மீடியா பிளேயர் பழைய பதிப்பினை நான் உபயோகித்த காரணத்தினால் DRM சோதனை செய்ய இயலாமல் தயங்கி நின்றது. அலுவலகத்தில் மீடியா பிளேயரினை புதுப்பிக்க இயலாமல் கஷ்டப்பட்ட போது, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் சென்ற பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகு தான் பாடலைக் கேட்க முடிந்தது. இது மிகச் சிறந்த பாடல் இல்லாவிடிலும், நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பிறகு வந்த சிவாஜி பாடலை விட சிறந்த பாடலிது.
2:35-ல் யாஹி யோகோ யாஹி யோகோ என்ற இடங்கள் இனிமையாக ஒலிக்கின்றது. 3:30 குழுவினரின் ஓசை அற்புதம்.
2. மனசு மருகுதே
திரைப்படம்: பள்ளிக்கூடம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: சுபிக்ஷா, டாக்டர் நாராயணன்
ஆரம்ப நாட்களிலிருந்தே பரத்வாஜ் பாடல்கள் மீது எனக்கு ஓர் இனம்புரியாத ஈர்ப்பு உண்டு. உணர்வுபூர்வமாக பாடல்களுக்கு இசையமைப்பவர்களில் பரத்வாஜிற்கு எப்போதும் இடம் உண்டு. பல பாடல்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். காதல் மன்னனில் இடம் பெற்ற 'வானும் மண்ணும் பாடல்', பூவேலியில் இடம் பெற்ற 'இதற்கு பேர் தான் காதலா', வசூல்ராஜாவில் இடம் பெற்ற 'காடு திறந்து கிடக்கின்றது' ஆட்டோகிராபில் இடம் பெற்ற 'நினைவுகள் நெஞ்சினில்' உள்ளிட்ட பல பாடல்களைக் குறிப்பிடலாம்.அவ்வகையில் 'பள்ளிக்கூடம்' படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடலையும் சேர்த்துக்கொள்ளலாம்.
நாராயணன், ரகுமான் குழுவில் சில ஆண்டுகளாக பாடி வருகிறார். தனியாக வித்யாசாகருக்கு சில பாடல்களையும் பாடியுள்ளார். 'பொய்'-ல் மூச்சு விடாமல் ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்று நினைக்கிறேன். ஒரிரு முறை கேட்ட ஞாபகம். பாடல் நிச்சயமாக வெற்றி பெற்று இவருக்குப் புகழ் தேடி தரும் என்பது எனது எண்ணம்.
எதுக்கு தெரியலை
விவரம் புரியலை
....
மனசு மருகுதே
எதுக்கு தெரியுமா?
எனக்கு தெரியலை...
அற்புதமான ராகம்.
3. காற்றின் மொழி
திரைப்படம்: மொழி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா
மொழி சமீபத்தில் வந்த சிறந்த படங்களில் ஒன்று (விஜய் படங்களைத் தவிர்த்துப் பார்த்தால் :)).
'காற்றின் மொழி' என்று ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சுஜாதாவின் மென்மையான் குரல் பாடலுக்கு வளம் சேர்க்கிறது. வித்யாசாகரின் இசை பெரும்பாலும் சாதாரண இசைக்கருவிகளைச் சார்ந்திருக்கும். அதற்கு இப்பாடல் ஓர் சிறந்த உதாரணம். ரகுமான் கூட சில நாட்களுக்கு முன்பாக, 'கணினியின் உதவியில்லாமல் பாடல்களுக்கு இசையமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறேன்', என்று கூறியிருந்தார். அவ்வகையில், வித்யாசாகர் எப்போதோ தேர்ந்து விட்டார் எனக் கூறலாம். அவருடைய சமீப கால பாடல்கள் அனைத்துமே இது போல மிக எளிமையாக தான் இருக்கின்றன. உ.ம். தம்பி, ஜி.
4. யாரோ யாருக்குள் இங்கு யாரோ
திரைப்படம்: சென்னை - 28
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பி. சரண்
இப்பாடல் ஒரு வகையில், இளையராஜா, கார்த்திக் ராஜா இசையில் பாடிய 'யாரோ யார் யாரோ' பாடலின் கருத்தை சிறிது ஒத்திருக்கிறது.ஆரம்பத்தில் வரும் வயலின் இசை அழகு.
5. காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்
திரைப்படம்: பச்சைக்கிளி முத்துசரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: நரேஷ் அய்யர்
இவ்வாண்டின் ஆரம்பத்தில் சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா (சரியாக ஞாபகம் இல்லை) விளையாடிய போட்டியைக் காண சேப்பாக்கம் சென்றிருந்தேன். அப்போது ஒவ்வொரு ஓவர் முடிவிலும் இப்படத்தின் டிரைலர் காட்டப்பட்டது. அதிலிடம் பெற்ற இசையால் கவரப்பட்டு இப்பாடல் வந்ததும் ஆவலுடன் இசைத்தட்டு வாங்கினேன். எல்லா பாடல்களையும் ஒரு முறை ஒலிக்கவிட்டு, பிடிக்காமல் வீட்டிலேயே வைத்துவிட்டேன். ஆனால் ஐ.பாடில் மட்டும் ரிப் செய்து வைத்திருந்தேன். ஒரு நாள், மற்ற பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த போது, இப்பாடலும் ஒலித்தது.
நானும், சரி தான், 'உன்னாலே உன்னாலே' படம் என்று நினைத்து பின்னர் ஒலிக்கவிடலாம் என்று நினைத்திருந்தேன். மறு நாள் மீண்டும் இப்பாடலை ஒலிக்க விட எனது ஐ-பாடில் முயற்சித்த போது, 'உன்னாலே உன்னாலே' ஆல்பத்தில் இப்பாடல் எங்கும் இல்லை. 'பச்சைக்கிளி' கண்ணில் பட்டது. ஆனால் அதில் இருக்காது என்று நம்பி முயற்சி செய்யவே இல்லை. சோர்ந்து போய்விட்டேன். மீண்டும் ஒரு நாள் அதிசயம் நிகழ்ந்தது. அதே போல் மீண்டும் ராண்டமாக பாடல்களை கேட்டுக்கொண்டிருந்த போது இப்பாடல் ஒலித்தது. குறித்து வைக்க படத்தின் பேரைப் பார்த்த போது ஆச்சர்யம். என்னவொரு அற்புதமான பாடலை இத்தனை நாட்களை கையில் வைத்திருந்தும் கேட்காமல் விட்டு விட்டோமே என்று வருத்தமாக இருந்தது. சரி பாடலுக்கு வருகிறேன்.
நரேஷ் அய்யரின் குரலா இது? அற்புதம். ரகுமானுக்குப் பல பாடல்கள் பாடியிருந்தாலும், ஹாரீஸின் இசையில் இவரது குரல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது.
1:26 -ல் வரும்
எதிர்காலம் என்னை வந்து முட்டுமோ..
கொஞ்சம் மிச்சம் உள்ள அச்சம் விடுமோ
அரியாத ஒஉது ஆசான், அகம் இனி வீசும்
அதில் தானே கரைந்தோடும் நம் வாழ்வின் வனவாசம்
ஏ மல்லிச்சரமே .... உன் கண்கள் இன்று...
அற்புதம்! அற்புதம்.
6.முதல் நாள் இன்று எதுவோ ஒன்று
உன்னாலே உன்னாலே..
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கே.கே. மஹாலக்ஷ்மி
நீண்ட நாட்களாக உன்னாலே உன்னாலே பாடல்களை கேட்டு வருகிறேன். ஆரம்பத்தில் 'ஜூன் போனால்' (Blue Rise பாடலின் அச்சு அசலான நகல்) கேட்டுக் கொண்டிருந்தேன். இப்படத்தில் இப்பாடலும், ஹரிணி பாடிய 'உன்னாலே உன்னாலே' பாடலும் சிறந்த பாடல்கள். வழக்கம்
போல், ஹரிணியின் குரல் அற்புதம். அதிலும் 3:05-ல்
'சரியென்று தெரியாமல்,
தவறென்று புரியாமல்
எதில் வந்து சேர்ந்தேன் நான்...'
இனிமை!
'முதல் நாள்' பாடலில்,
2:57 'உதட்டாலே காதல் எனும் சொல்லை
உரைத்தாலே கூட வரும் தொல்லை'
இடத்தில் வரும் ராகம் நன்று. கே.கே. வழக்கம் போல் சிறப்பாக பாடியிருக்கிறார். மஹாலக்ஷ்மி பரவாயில்லை. நிச்சயம் பாம்பே ஜெயஸ்ரீயை விட நன்று.
7. ஒரே கனா
திரைப்படம்: குரு
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், சித்ரா, மெட்ராஸ் கரோலே குழுவினர்.
இதே பாடலை சென்ற பதிவிலும் தெரிவித்திருந்தேன். இன்னும் இப்பாடல் மீதான மோகம் குறையவில்லை. ஒவ்வொரு முறை கேட்கும் போது, புத்துணர்ச்சி ஊட்டுகிறது இப்பாடல். சோர்ந்திருக்கும் தருணங்களில் புத்துயிர் ஊட்டும் பாடல்களில் இப்பாடலுக்கு, என்னுடைய பிளே லிஸ்டில் இனி எப்போதும் இடமுண்டு. இப்பாடல்களைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன். இந்தி பதிவினை விட, தமிழ் பதிவு பிடிக்க காரணம், தமிழில் பாடலில் அர்த்தம் புரிய முடிவதால் தான்.
சென்ற பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.
எனக்கு 'தேரே பினா' பாடல் பிடித்திருந்தாலும், 'ஜாகே ஹே' பாடலை நான் மிகவும் விரும்பிக் கேட்பதற்குக் காரணம், இப்பாடலில் இழைந்தோடும் சோகமும், பாடலின் நடுவில் வரும் இசையும், குழுவினரின் குரலும் தான். பாடலின் ஆரம்பத்தில் சித்ராவின் குரலையொட்டி வரும் குழுவினரின் ராகமும், வயலின் இசையும், மீண்டும் 1:50-ல் ஒரு முழக்கத்துடன் குழுவினரின் ராகம் தொடர்வது இனிமை. ரகுமான், மிக மெதுவாக, சித்ராவினைத் தொடர்ந்து பாடிவிட்டு, 3:21-ல் ரகுமான் சுருதியை உயர்த்தி பாடுவதும், 4:28-ல் அதனைத் தொடர்ந்து வரும் குழுவினரின் முழக்கமும் அற்புதம்.
இப்பாடல் தமிழில் இன்னும் அற்புதம். மெட்ராஸ் கரோலே குழுவினர் மிக மிக அருமையாக பாடியிருக்கிறார்கள். சொல்வதற்கு வார்த்தையில்லை.
ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்
கனா மெய்யாகும் நாள் வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்
வானே
என் மேலே
சாய்ந்தாலுமே
நான்
மீண்டு காட்டுவேன்
நீ என்னைக்
கொஞ்சம்
கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்'
அற்புதமான ராகம், உயிரைக் கொல்லும் வரிகள், உயிரை உருக்கும் குரல்கள்!
குறிப்பு: அடுத்த வாரம் முதற்கொண்டு ரகுமான், வட அமெரிக்காவில் சில மாகாணங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். முடிந்தால் சென்று கண்டுகளிக்கவும்.
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், பிளாசே, மற்றும் குழுவினர்.
இப்பாடலின் காரணத்தைப் பற்றி நான் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. இப்பாடல் இந்தியாவில் வெளிவருவதற்கு முன்பாக பல இணையத்தளங்களில் விற்பனைக்காக இருந்தது. நானும் வாங்கி ஒலிக்க முயற்சி செய்த போது, விண்டோஸ் மீடியா பிளேயர் பழைய பதிப்பினை நான் உபயோகித்த காரணத்தினால் DRM சோதனை செய்ய இயலாமல் தயங்கி நின்றது. அலுவலகத்தில் மீடியா பிளேயரினை புதுப்பிக்க இயலாமல் கஷ்டப்பட்ட போது, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் சென்ற பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகு தான் பாடலைக் கேட்க முடிந்தது. இது மிகச் சிறந்த பாடல் இல்லாவிடிலும், நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பிறகு வந்த சிவாஜி பாடலை விட சிறந்த பாடலிது.
2:35-ல் யாஹி யோகோ யாஹி யோகோ என்ற இடங்கள் இனிமையாக ஒலிக்கின்றது. 3:30 குழுவினரின் ஓசை அற்புதம்.
2. மனசு மருகுதே
திரைப்படம்: பள்ளிக்கூடம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: சுபிக்ஷா, டாக்டர் நாராயணன்
ஆரம்ப நாட்களிலிருந்தே பரத்வாஜ் பாடல்கள் மீது எனக்கு ஓர் இனம்புரியாத ஈர்ப்பு உண்டு. உணர்வுபூர்வமாக பாடல்களுக்கு இசையமைப்பவர்களில் பரத்வாஜிற்கு எப்போதும் இடம் உண்டு. பல பாடல்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். காதல் மன்னனில் இடம் பெற்ற 'வானும் மண்ணும் பாடல்', பூவேலியில் இடம் பெற்ற 'இதற்கு பேர் தான் காதலா', வசூல்ராஜாவில் இடம் பெற்ற 'காடு திறந்து கிடக்கின்றது' ஆட்டோகிராபில் இடம் பெற்ற 'நினைவுகள் நெஞ்சினில்' உள்ளிட்ட பல பாடல்களைக் குறிப்பிடலாம்.அவ்வகையில் 'பள்ளிக்கூடம்' படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடலையும் சேர்த்துக்கொள்ளலாம்.
நாராயணன், ரகுமான் குழுவில் சில ஆண்டுகளாக பாடி வருகிறார். தனியாக வித்யாசாகருக்கு சில பாடல்களையும் பாடியுள்ளார். 'பொய்'-ல் மூச்சு விடாமல் ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்று நினைக்கிறேன். ஒரிரு முறை கேட்ட ஞாபகம். பாடல் நிச்சயமாக வெற்றி பெற்று இவருக்குப் புகழ் தேடி தரும் என்பது எனது எண்ணம்.
எதுக்கு தெரியலை
விவரம் புரியலை
....
மனசு மருகுதே
எதுக்கு தெரியுமா?
எனக்கு தெரியலை...
அற்புதமான ராகம்.
3. காற்றின் மொழி
திரைப்படம்: மொழி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா
மொழி சமீபத்தில் வந்த சிறந்த படங்களில் ஒன்று (விஜய் படங்களைத் தவிர்த்துப் பார்த்தால் :)).
'காற்றின் மொழி' என்று ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சுஜாதாவின் மென்மையான் குரல் பாடலுக்கு வளம் சேர்க்கிறது. வித்யாசாகரின் இசை பெரும்பாலும் சாதாரண இசைக்கருவிகளைச் சார்ந்திருக்கும். அதற்கு இப்பாடல் ஓர் சிறந்த உதாரணம். ரகுமான் கூட சில நாட்களுக்கு முன்பாக, 'கணினியின் உதவியில்லாமல் பாடல்களுக்கு இசையமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறேன்', என்று கூறியிருந்தார். அவ்வகையில், வித்யாசாகர் எப்போதோ தேர்ந்து விட்டார் எனக் கூறலாம். அவருடைய சமீப கால பாடல்கள் அனைத்துமே இது போல மிக எளிமையாக தான் இருக்கின்றன. உ.ம். தம்பி, ஜி.
4. யாரோ யாருக்குள் இங்கு யாரோ
திரைப்படம்: சென்னை - 28
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பி. சரண்
இப்பாடல் ஒரு வகையில், இளையராஜா, கார்த்திக் ராஜா இசையில் பாடிய 'யாரோ யார் யாரோ' பாடலின் கருத்தை சிறிது ஒத்திருக்கிறது.ஆரம்பத்தில் வரும் வயலின் இசை அழகு.
5. காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்
திரைப்படம்: பச்சைக்கிளி முத்துசரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: நரேஷ் அய்யர்
இவ்வாண்டின் ஆரம்பத்தில் சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா (சரியாக ஞாபகம் இல்லை) விளையாடிய போட்டியைக் காண சேப்பாக்கம் சென்றிருந்தேன். அப்போது ஒவ்வொரு ஓவர் முடிவிலும் இப்படத்தின் டிரைலர் காட்டப்பட்டது. அதிலிடம் பெற்ற இசையால் கவரப்பட்டு இப்பாடல் வந்ததும் ஆவலுடன் இசைத்தட்டு வாங்கினேன். எல்லா பாடல்களையும் ஒரு முறை ஒலிக்கவிட்டு, பிடிக்காமல் வீட்டிலேயே வைத்துவிட்டேன். ஆனால் ஐ.பாடில் மட்டும் ரிப் செய்து வைத்திருந்தேன். ஒரு நாள், மற்ற பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த போது, இப்பாடலும் ஒலித்தது.
நானும், சரி தான், 'உன்னாலே உன்னாலே' படம் என்று நினைத்து பின்னர் ஒலிக்கவிடலாம் என்று நினைத்திருந்தேன். மறு நாள் மீண்டும் இப்பாடலை ஒலிக்க விட எனது ஐ-பாடில் முயற்சித்த போது, 'உன்னாலே உன்னாலே' ஆல்பத்தில் இப்பாடல் எங்கும் இல்லை. 'பச்சைக்கிளி' கண்ணில் பட்டது. ஆனால் அதில் இருக்காது என்று நம்பி முயற்சி செய்யவே இல்லை. சோர்ந்து போய்விட்டேன். மீண்டும் ஒரு நாள் அதிசயம் நிகழ்ந்தது. அதே போல் மீண்டும் ராண்டமாக பாடல்களை கேட்டுக்கொண்டிருந்த போது இப்பாடல் ஒலித்தது. குறித்து வைக்க படத்தின் பேரைப் பார்த்த போது ஆச்சர்யம். என்னவொரு அற்புதமான பாடலை இத்தனை நாட்களை கையில் வைத்திருந்தும் கேட்காமல் விட்டு விட்டோமே என்று வருத்தமாக இருந்தது. சரி பாடலுக்கு வருகிறேன்.
நரேஷ் அய்யரின் குரலா இது? அற்புதம். ரகுமானுக்குப் பல பாடல்கள் பாடியிருந்தாலும், ஹாரீஸின் இசையில் இவரது குரல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது.
1:26 -ல் வரும்
எதிர்காலம் என்னை வந்து முட்டுமோ..
கொஞ்சம் மிச்சம் உள்ள அச்சம் விடுமோ
அரியாத ஒஉது ஆசான், அகம் இனி வீசும்
அதில் தானே கரைந்தோடும் நம் வாழ்வின் வனவாசம்
ஏ மல்லிச்சரமே .... உன் கண்கள் இன்று...
அற்புதம்! அற்புதம்.
6.முதல் நாள் இன்று எதுவோ ஒன்று
உன்னாலே உன்னாலே..
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கே.கே. மஹாலக்ஷ்மி
நீண்ட நாட்களாக உன்னாலே உன்னாலே பாடல்களை கேட்டு வருகிறேன். ஆரம்பத்தில் 'ஜூன் போனால்' (Blue Rise பாடலின் அச்சு அசலான நகல்) கேட்டுக் கொண்டிருந்தேன். இப்படத்தில் இப்பாடலும், ஹரிணி பாடிய 'உன்னாலே உன்னாலே' பாடலும் சிறந்த பாடல்கள். வழக்கம்
போல், ஹரிணியின் குரல் அற்புதம். அதிலும் 3:05-ல்
'சரியென்று தெரியாமல்,
தவறென்று புரியாமல்
எதில் வந்து சேர்ந்தேன் நான்...'
இனிமை!
'முதல் நாள்' பாடலில்,
2:57 'உதட்டாலே காதல் எனும் சொல்லை
உரைத்தாலே கூட வரும் தொல்லை'
இடத்தில் வரும் ராகம் நன்று. கே.கே. வழக்கம் போல் சிறப்பாக பாடியிருக்கிறார். மஹாலக்ஷ்மி பரவாயில்லை. நிச்சயம் பாம்பே ஜெயஸ்ரீயை விட நன்று.
7. ஒரே கனா
திரைப்படம்: குரு
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், சித்ரா, மெட்ராஸ் கரோலே குழுவினர்.
இதே பாடலை சென்ற பதிவிலும் தெரிவித்திருந்தேன். இன்னும் இப்பாடல் மீதான மோகம் குறையவில்லை. ஒவ்வொரு முறை கேட்கும் போது, புத்துணர்ச்சி ஊட்டுகிறது இப்பாடல். சோர்ந்திருக்கும் தருணங்களில் புத்துயிர் ஊட்டும் பாடல்களில் இப்பாடலுக்கு, என்னுடைய பிளே லிஸ்டில் இனி எப்போதும் இடமுண்டு. இப்பாடல்களைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன். இந்தி பதிவினை விட, தமிழ் பதிவு பிடிக்க காரணம், தமிழில் பாடலில் அர்த்தம் புரிய முடிவதால் தான்.
சென்ற பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.
எனக்கு 'தேரே பினா' பாடல் பிடித்திருந்தாலும், 'ஜாகே ஹே' பாடலை நான் மிகவும் விரும்பிக் கேட்பதற்குக் காரணம், இப்பாடலில் இழைந்தோடும் சோகமும், பாடலின் நடுவில் வரும் இசையும், குழுவினரின் குரலும் தான். பாடலின் ஆரம்பத்தில் சித்ராவின் குரலையொட்டி வரும் குழுவினரின் ராகமும், வயலின் இசையும், மீண்டும் 1:50-ல் ஒரு முழக்கத்துடன் குழுவினரின் ராகம் தொடர்வது இனிமை. ரகுமான், மிக மெதுவாக, சித்ராவினைத் தொடர்ந்து பாடிவிட்டு, 3:21-ல் ரகுமான் சுருதியை உயர்த்தி பாடுவதும், 4:28-ல் அதனைத் தொடர்ந்து வரும் குழுவினரின் முழக்கமும் அற்புதம்.
இப்பாடல் தமிழில் இன்னும் அற்புதம். மெட்ராஸ் கரோலே குழுவினர் மிக மிக அருமையாக பாடியிருக்கிறார்கள். சொல்வதற்கு வார்த்தையில்லை.
ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்
கனா மெய்யாகும் நாள் வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்
வானே
என் மேலே
சாய்ந்தாலுமே
நான்
மீண்டு காட்டுவேன்
நீ என்னைக்
கொஞ்சம்
கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்'
அற்புதமான ராகம், உயிரைக் கொல்லும் வரிகள், உயிரை உருக்கும் குரல்கள்!
குறிப்பு: அடுத்த வாரம் முதற்கொண்டு ரகுமான், வட அமெரிக்காவில் சில மாகாணங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். முடிந்தால் சென்று கண்டுகளிக்கவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)