சனி, பிப்ரவரி 23, 2008

ஏன் எனக்கு மயக்கம் - காதலிக்க நேரமில்லை

சென்ற வாரம் எழுதிய சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள் பட்டியலில் ஒரு பாடலை சேர்க்க மறந்து விட்டேன் என்பதனை மிக தாமதமாக தான் உணர்ந்தேன். அதனை விட்டுவிட்டு அடுத்த பட்டியலில் சேர்க்கும் அளவிற்கு பொறுமை இல்லை எனக்கு. அது நான் பல முறை ஆச்சர்யப்பட்ட புது இசையமைப்பாளர் (இன்னும் அவரை புது இசையமைப்பாளர் என்று கூறுவதில் உடன்பாடு இல்லை), விஜய் ஆண்டனியின் இசையில் வெளியான ஒரு பாடல்.

இம்முறை திரைப்பட பாடல் அல்ல; தமிழ் தொலைக்காட்சி தொடருக்காக அவர் இசையமைத்த பாடல். சில நாட்களுக்கு முன்பாக நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். சில நொடிகள் மட்டுமே இந்தப் பாடல் நமக்கு பிடிக்குமா என்ற தயக்கம் இருந்தது. அந்த பெண் பாடகர் ஆ... என்று பாட ஆரம்பித்ததுமே அந்தத் தயக்கம் காணாமல் போய்விட்டது. உங்களில் பலர் அப்பாடலை கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள்.

பாடலைப் பாடியவர்: சங்கீதா ராஜேஸ்வரன்
தொடர்: காதலிக்க நேரமில்லை.
பாடல்: என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு

காதலனை எண்ணி, எண்ணி காதலி பாடும் படியாக இப்பாடல் அமைந்துள்ளது. இத்தனைக்கும் ஒரு சரணம் மட்டும் தான் இப்பாடலில். ஆனாலும் அட்டகாசம்! அற்புதம்.


என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த
அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடுமுன்
செய்தி அனுப்பு

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர
தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
சொல்லி அனுப்பு

என்ற எட்டுவரிகளை அட்டகாசமான ராகத்தில் பாடி விட்டு அனுப்புபுபு ஹோ ஓஓஓஒ என்று தொடர்ந்து


பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசி செல்கிறேன்

மரங்கள் கூட நடப்பது போலே
நினைத்துக் கொல்கிறேன்

கடிதம் ஒன்றில் கப்பல் செயுது
மழையில்
விடுகிறேன்

கனவில் மட்டும் காதல் செய்து
இரவில் கொல்கிறேன்

மேற்கண்ட வரிகளை பாடும்போது, நம்மையே மறக்க செய்கிறார் பாடகர். அற்புதம்!

சரணத்திற்கு முன்பாக வரும் அந்த ஆலாபனையும் நன்றாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சரணம் மிக இனிமையாக இருந்தாலும், பல்லவி அளவிற்கு இனிமை அல்ல.

ஆனாலும் பாடகி, தனது வித்தியாசமான குரலினால் அங்கேயும் கவர்கிறார். உதாரணத்திற்கு 1:40-ல்


யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
உன் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள்
தீர்த்திட வாராயோ

ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ
ஒரு பகல் எனை சுடுவது
ஏனோ

அதிலும் அந்த ஏனோ (1:53) என்ற வார்த்தைக்கு ஓர் நீட்டத்தைக் கொடுத்து அதனை இனிமையாக்கிய விதமே தனி தான்.

விஜய் ஆண்டனிக்கும் நன்றி.

இதோ அந்த பாடல்.





இதே போல் சென்ற ஆண்டு இவரின் இன்னொரு பாடலையும் குறிப்பிட மறந்து விட்டேன். அது 'நான் அவன் இல்லை படத்தில் இடம் பெற்ற 'ஏன் எனக்கு மயக்கம்' என்ற பாடல். அப்பாடலும் ஓர் அட்டகாசமான, அற்புதமான, இனிமையான பாடல். அப்பாடலைப் பாடியவரும் அதே பாடகர் - சங்கீதா ராஜேஸ்வரன். இணைந்து பாடியிருப்பவர் ஜெயதேவ்.

இப்பாடலின் ஆரம்பத்தில் வரும் வயலின் இசையே மிக அருமை. அதனை விடவும் இரண்டு இடங்களில் ராகம் என்னை மிகவும் கவர்ந்தது.

'ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கென்னாச்சு.... '

என்று ஆணும் பெண்ணும் பாடிவிட்டு,

பெண் (00:52)


'ஹே இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இந்த சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால்
விரலில் வெட்கம் வளர்ந்தேன் - பறந்தேன்'
என்று பாடுமிடத்திலும்

முதலாம் சரணத்தில் பெண் பாடும் (02:24)-ல்

'கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்
சாகும் போது உன்னை மட்டும் தேட சம்மதம்'
என்று பாடுமிடத்திலும் தான். (அதனை ஒத்த இரண்டாம் சரணம் 'லட்சம் மின்னல் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன் - 4:07 வரிகளும் தான்) .

அதுவும் மேலே குறிப்பிட்ட வரிகளில் தான் எத்தனை இனிமை (ராகம், பாடிய விதம், வரிகள்). மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் வரிகள்.

இதோ அந்த பாடல்



விஜய் ஆண்டனி இது போல் இன்னும் பல நல்ல பாடல்கள் கொடுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி இப்பதிவினை முடிக்கிறேன். இதனை ஒத்த வரிகளை எனது பழைய பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன்.

கருத்துகள் இல்லை :